Skip to main content

சொற்களில் புதைந்துள்ள வரலாறு - தொல்லியல் ஆய்வாளர் தகவல்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

 archaeologist said that history is buried in words

 

பழங்காலம் முதல் பாறைகளிலும், பானைகளிலும் தமிழர்கள் பல குறியீடுகளைப் போட்டு வைத்துள்ளனர். திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் தமிழ் மன்றம், டிசிகாப் மென்பொருள் நிறுவனம் இணைந்து பொருட்பால் கருத்தரங்கம் மற்றும் நித்திலம் இதழ் வெளியீட்டு விழாவை என்.ஐ.டி வளாகத்தில்  நடத்தின. டிசிகாப் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் சிதம்பரம், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, எழுத்தாளர் சொக்கன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

 

மன்றத்தின் தலைவர் அருண் பிரபாகர் வரவேற்றுப் பேசுகையில், “1969ல் தொடங்கப்பட்டு பொறியியலில் ஒரு தமிழ்த் தேடலாய், மாணவர்களுக்கிடையே தமிழையும் தமிழர் சார்ந்த வாழ்வியலையும் பறைசாற்றும் விதமாக அவர்களுக்கிடையே தமிழ் சார்ந்த போட்டிகள் மற்றும் கருத்தரங்கங்கள், தமிழ் தெரியாத மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புகள் போன்றவற்றை 54 ஆண்டுகளாக இம்மன்றம் நடத்தி வருகிறது” என்றார்.

 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு சொற்கள் வழி வரலாறு தேடல் என்ற தலைப்பில் பேசியபோது, “அன்றிலிருந்து இன்று வரை நமது மரபு சிதையாமல் சொற்கள் மூலம் கடத்தப்பட்டு வருகிறது. மிகப் பழங்காலம் முதல் பாறைகளிலும், பானைகளிலும் தமிழர்கள் பல குறியீடுகளை போட்டு வைத்துள்ளனர். தமிழி எழுத்துகளும், தமிழின் வேர்ச்சொற்களும் உலகின் பல மொழிகளில் பரவியுள்ளன. தமிழின் சொற்கள் அனைத்தும் காரணச் சொற்கள் தான். காரணமின்றி எந்தச் சொல்லுக்கும் பெயர் இடப்படவில்லை. களரி, அயன், தென்புலம், பெனின்சூலா, போலிஸ், கடவுள் போன்ற ஆங்கிலத்தில் உள்ள பல சொற்கள் தமிழின் கொடை. 

 

4000 ஆண்டுகளுக்கு முன் இரும்பு காலத்தில் விளையாடப் பயன்படுத்திய வட்டச்சில்லு உள்ளிட்டவை இப்போதும் சிறுமியர் விளையாட்டில் உள்ளது. பழங்காலங்களில் மண் பானை பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வழக்கம் இன்றும் உலோகப் பாத்திரங்களிலும் பெயர் பொறிக்கும் பழக்கம் தொடர்கிறது. அகழாய்வு, கல்வெட்டுகளில் அறியப்படும் வரலாறு இன்றும் தமிழரின் பயன்பாட்டில் உள்ளது அதன் தொடர்ச்சியைக் காட்டுகிறது. பழந்தமிழ் மக்கள் வரைந்த பாறை ஓவியங்கள் வானியல் சார்ந்த சிந்தனையை வலியுறுத்துவதாகவும் அவற்றை பற்றிய மேலும் தேடல்கள் தொழில்நுட்பம் சார்ந்து அமைய வேண்டும்” எனவும் அதைத் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுங்கள் என மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். மன்றத்தின் பொதுச் செயலாளர் மாணவர் யுகேந்தர் நன்றி கூறினார்.

 

 archaeologist said that history is buried in words

 

இந்நிகழ்வில் மாணவர்களே எழுதி வடிவமைத்த தமிழ் மன்றத்தின் ஆண்டு இதழான நித்திலம் 23 வெளியிடப்பட்டது. தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் தமிழ் அறிவை வளர்க்கும் பொருட்டு அவர்களுக்கிடையே வைக்கப்பட்ட விதை எனும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாகப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்வு முழுவதும் மாணவர்களாலேயே ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.