Skip to main content

கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்வதை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

 Appointment of officers to monitor the darshan of Sami by ascending to the Kanakasabha

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபையில்(சிற்றம்பல மேடை) ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இதற்கு கோவில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு ஆன்மீக அமைப்புகள் உள்ளிட்டவைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனையெடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தினமும் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

 

 Appointment of officers to monitor the darshan of Sami by ascending to the Kanakasabha

 

கடந்த சில நாட்களாக பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த பல புகார்கள் கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் கனகசபை தரிசனம் செய்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் கண்காணிக்க கடலூர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஜோதி,  இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பணி அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 Appointment of officers to monitor the darshan of Sami by ascending to the Kanakasabha

 

அதன் அடிப்படையில் ஒரத்தூர், மார்க்கசகாயீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் ராஜ்குமார், இன்று (அக்.13) கொஞ்சிக்குப்பம், அய்யனார், விநாயகர், மாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் வேல்விழி,  நாளை (அக்.14), ஆய்வர் நரசிங்கப்பெருமாள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறப்புப் பணி அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கடலூர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர்(கூடுதல் பொறுப்பு) ஜோதி தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.