Skip to main content

மக்களை காப்பவர்களுக்கும் பாதுகாப்பு அவசியம்... கிருமி நாசினி வழங்கிய காவல் ஆணையர்..! (படங்கள்)

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

 

தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ள நிலையில், மக்களை கரோனாவில் இருந்து பாதுகாக்க அரசு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. 

மக்களுக்கான கிருமி நாசினி மற்றும் முக கவசங்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழலில் பலர் தாமாக முன்வந்து அவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர். சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காவலர்களின் சுகாதாரத்தை உறுதிசெய்யவும் காவலர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமி நாசினியை வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்