Skip to main content

அ.தி.மு.க. பொதுக்குழு பேனர்கள் கிழிப்பு! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

admk Public Banners Banned!

 

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்காக வானகரத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் கிழிக்கப்பட்டுள்ளன. 


சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் நாளை (23/06/2022) அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறு வருகின்றன. அந்த மண்டபத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்பினர். 

 

admk Public Banners Banned!

 

அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களே பேனர்களைக் கிழித்ததாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருபவரும், முன்னாள் அமைச்சருமான பென்ஜமின்  குற்றம் சாட்டியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்