Published on 29/04/2019 | Edited on 29/04/2019
நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிப்பதற்கு சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதிவுத்துறை அதிகாரியான சேகர் என்பவரை தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்கும் அதிகாரியாக நியமனம் செய்துள்ளது அரசு.
![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/mNug7RvraeSxVpFZetBB7aP_C8bMGTr7cqpbjX3RwgI/1556519224/sites/default/files/inline-images/vishal_35.jpg)
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி சேகர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நாளை விசாரிக்கிறது நீதிமன்றம்.