Skip to main content

''தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை''-வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் பேட்டி!

Published on 05/09/2021 | Edited on 06/09/2021

 

Action to recover assets belonging to the Tamil Nadu Waqf Board - Interview with Waqf Board Chairman Abdul Rahman!

 

சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் மற்றும் லால்கான் பள்ளிவாசல் வக்பு வாரியம் இணைந்து புதிய மதரஸா துவக்க நிகழ்ச்சி லால்கான் பள்ளி வாசலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ''தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் பல்வேறு முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை அவருக்கு வாக்களிக்காதவர்களும் பாரட்டி வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள். அவர் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறார்.

 

அதேபோல் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட நான் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறேன். தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் தமிழக முழுவதும் ரூ150 லட்சம் கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர்.  இந்த சொத்துக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வக்பு வாரிய சொத்துக்களை மீட்பதில் தமிழக முதல்வர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். சொத்துக்களை மீட்டு மருத்துவக் கல்லூரி, கல்லூரி,பள்ளிகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும்.  வக்பு வாரிய நிர்வாகத்தை கணினிமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

ஒவ்வொரு திங்கள் கிழமையும் வக்பு வாரிய ஆணையரை சந்தித்து குறைகளைக் கூறினால்  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பதிவு செய்யாத மசூதிகளை முறைப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் 9 ஆயிரம் மசூதிகள் உள்ளது. இதில் 3 ஆயிரம் மட்டுமே பதிவில் உள்ளது. அனைத்து மசூதிகளையும் சட்டப்படி கண்டிப்பாக பதிவு செய்துகொள்ள வேண்டும்'' என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் லால்கான் பள்ளிவாசல் நிர்வாகி ஜியாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“20 கோடி மக்கள் முக்கியமில்லையா?” - பிரதமர் பேச்சுக்கு கபில் சிபல் காட்டம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, கங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி கபில் சிபல், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பெண்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் காங்கிரஸ் கொடுப்பதாக பிரதமர் மோடி பேசுகிறார். இந்த நாட்டின் 20 கோடி மக்கள் முக்கியமில்லையா? அவர்களுக்கு ஆசைகள் இல்லையா?

அரசியல் இவ்வளவு நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. வரலாற்றில் இது நடந்ததில்லை. அப்படி நடக்க நான் விரும்பவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் அதைக் கண்டிக்க வேண்டும் மற்றும் பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

தமிழகத்தில் ரம்ஜான்; தேதியை உறுதி செய்த தலைமை காஜி

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
nn

ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அளித்து ஈகையை வெளிப்படுத்தும் நன்னாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவு செய்யப்படுகிறது.  இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் (11/04/2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.