Skip to main content

மருந்து கடைக்காரரை நம்பி கருகலைப்பு! சுயநினைவு இழந்த இளம் பெண்! 

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

Abortion issue  Young woman who lost consciousness!

 

கடலூர் மாவட்டம், மங்களுர் அருகிலுள்ள கச்சிமயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(50). இவர், சில ஆண்டுகளாக ராமநத்தம் பகுதியில் மருந்துக் கடை (மெடிக்கல் ஷாப்) வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அடிக்கடி மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காக வந்து சென்றுள்ளார் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன். இவரது மனைவி கவி (27 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  


இந்த நிலையில் வேல்முருகன் மனைவி கவி மீண்டும் கர்ப்பவதியாகியுள்ளார். ஆனால் தங்களுக்கு மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று  வேல்முருகன், கவி இருவரும் முடிவு செய்து, ராமநத்தம் முருகன் மெடிக்கல் ஷாப்புக்கு கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். அவரிடம் கவிக்கு கருக்கலைப்பு செய்வது சம்பந்தமாக வேல்முருகன் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது மெடிக்கல் ஷாப் முருகன் கவிக்கு தானே கருக்கலைப்பு செய்வதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து முருகன் தனது மருந்துக்கடையில் வைத்து கவிக்கு மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். 


இதில் கவி மயக்கம் அடைந்து ஒரு கட்டத்திற்கு மேல், காலையிலிருந்து மாலை வரை சுய நினைவு திரும்பாமல் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார். இதைக் கண்டு பதறிப்போன முருகன், வேல்முருகனை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஒரு காரில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கவியை கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். 


கவியை மருத்துவமனைக்குள் படுக்க வைத்து வேல்முருகன், முருகனை பார்க்க வெளியே வந்தபோது முருகன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கவிக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் மெடிக்கல் முருகன் மீது வழக்கு பதிவு செய்து முருகனை தேடிச் சென்றனர். அவர் அதற்குள் தலைமறைவாகிவிட்டார். போலீசாரின் விசாரணையில் முருகன் மெடிக்கல் ஷாப் நடத்துவதற்கு உரிய படிப்பை படிக்காமலும், அதற்கான உரிமம் இல்லாமலும் மெடிக்கல் ஷாப் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இதற்கு முன் அவர் ஜவுளிக்கடை நடத்தி வந்ததும், அதை மூடிவிட்டு மெடிக்கல் ஷாப் வியாபாரத்தை ஆரம்பித்ததும் தெரியவந்துள்ளது. தற்போது போலீஸார் முருகனை தீவிரமாக தேடிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாலையோர வியாபாரி மீது பாய்ந்த 'பாரதிய நியாய சன்ஹிதா'- அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 'Bharatiya Nyaya Sanhita' on Roadside Vendor - New Criminal Laws Come Into Force

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதி இருந்த கடிதத்தில் 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் இன்று அமலுக்கு வந்ததோடு டெல்லியில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் கவுன்சிலர் கொலை; கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சூறை!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Cuddalore Vandipalayam Former ADMK councilor Pushparajan incident

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். இந்த ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. புஷ்பநாதனை படுகொலை செய்தோரைத் துரிதமாகக் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.