Skip to main content

70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 20 வயது இளைஞன்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

  20-year-old man misbehaved with a 70-year-old woman

 

வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி ஜெயலட்சுமி. திருமணம் செய்து கொள்ளாத இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மே 27 ஆம் தேதி மதியம் சமைத்து சாப்பிட்டுவிட்டு, தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். வெயிலின் தாக்கம் காரணமாக புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் கதவை தாழ் இடாமல் இருந்துள்ளார்.

 

மாலை 4 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க ஏசி மெக்கானிக் வேலை செய்யும் தவூத் பாஷா என்ற வாலிபர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்தவர் “எதுக்குப்பா உள்ள வர்ற” எனக் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே... வாலிபர் திடீரென மூதாட்டியை பலவந்தமாகப் பிடித்து கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அலறி கூச்சலிட்டுள்ளார். இதனைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து வாலிபரை பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அடித்தவர்களிடம் இருந்து அந்த வாலிபர் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தப்பியோடிய வாலிபரை தீவிரமாகத் தேடி வந்த காவல்துறையினர், அவரைப் பிடித்து விசாரித்தபோது, மது போதையில் அப்படி செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதனை நம்பாத போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.