Skip to main content

11 தமிழக மீனவர்கள் கைது!!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
 11 Tamil Nadu fishermen arrested

 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

 

 புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் இரண்டு படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

 

 நெடுந்தீவுக்கு வடகிழக்கே லைட் ஹவுஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் காரைநகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்