Skip to main content

கட்டணக் கொள்ளையில் இராஜ முத்தையா மருத்துவக்கல்லூரி: வேல்முருகன் குற்றச்சாட்டு!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020
  velmurugan

 

கட்டணக் கொள்ளையில் இராஜ முத்தையா மருத்துவக்கல்லூரி ஈடுபட்டுள்ளது, எனவே இராஜ முத்தையா மருத்துவகல்லூரியை அரசுடைமையாக்கி கொண்டதற்கான அரசாணையை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த இராஜ முத்தையா மருத்துவக்கல்லூரியை, கடலூர் மாவட்டத்தின் அரசு மருத்துவக்கல்லூரியாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை கடந்த 2019-2020 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நிதி உரையில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, இராஜ முத்தையா மருத்துவக்கல்லூரி, தற்போது அரசு மருத்துவக்கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

 

அதன் அடிப்படையில்,  அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கட்டணமாக ரூ.13,600 மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக கடந்த கல்வியாண்டியில் ரூ.400,000 வசூலித்து, பகல் கொள்ளையில் ஈடுபட்டது கல்லூரி நிர்வாகம்.  தற்போது அதை விட கூடுதலாக ரூ.5,44,370 - யை வசூலிக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இக்கட்டணம் என்பது, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துக்கல்லூரியில் வசூலிக்கப்படும் தொகையை விட கூடுதலானது.

 

இராஜ முத்தையா மருத்துவகல்லூரி, அரசு மருத்துவகல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கட்டணம் 13,600 மட்டுமே கல்லூரி நிர்வாகம் வசூலிக்கும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்திருந்து காத்திருந்தனர். ஆனால், நடப்பாண்டின் கட்டணமாக ரூ.5,44,370, சென்ற ஆண்டு நிலுவைத்தொகை ரூ.1,47,370 மற்றும் விடுதி கட்டணம் ரூ.80,000 என மொத்தம் ரூ.7,80,000-யை உடனடியாக செலுத்தக்கோரி கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கல்வி கற்க வரும் மாணவர்களை, பணம் கொழிக்கும் மரமாக கருதி வரும் கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையானது  வன்மையாக கண்டிக்கதக்கது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையின்றி வீட்டில் முடங்கி கிடந்தவர்கள், எப்படி ரூ.7,80,000 கட்டணத்தை கட்டணத்தை கட்ட முடியும் என்று தமிழக அரசு சிந்தித்து பார்க்காதது மிகவும் வேதனையளிக்கிறது.

 

எனவே இராஜ முத்தையா மருத்துவகல்லூரியை அரசுடைமையாக்கி கொண்டதற்கான அரசாணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும், கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையும் திரும்ப பெற வேண்டும் எனவும் . இவ்விவகாரத்தில் தமிழக அரசும், கல்லூரி நிர்வாகமும் அலட்சியம் காட்டும் பட்சத்தில், மாணவர்களையும், பெற்றோர்களையும் , மக்களையும் அணி  திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.