தமிழகத்தில் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் ஜூலையில் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 3 எம்பிக்களும், அதிமுக சார்பில் 3 எம்பிக்களும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
திமுகவில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி, கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளருக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு இடங்களுக்கு கட்சிக்குள் இருக்கும் யாருக்கு வழக்கப்படும் என்று விவாதங்கள் நடந்து வருகிறது. இதனிடையே திமுகவில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரஸ் கேட்பதாகவும், அதுவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்காக அந்த வாய்ப்பு கேட்பதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது.
![ks alagiri press meet sathiyamoorthy bhavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ci3vD0DxGAx48ufPBtCCBqAjyYaklW94E9lCbrw48Yk/1561794597/sites/default/files/inline-images/congress%2071.jpg)
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம், தமிழ்நாட்டில் இருந்து மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறாரா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், தமிழகத்தில் இருந்து மன்மோகன் சிங்கிற்கு தமிழகத்தில் ராஜ்யசபா சீட் கேட்பதாக எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றார்.