Skip to main content

“மூணு நாள் ஆச்சு இன்னும் பில் வரல; முடிஞ்சா இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள...” -அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி 

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

 'It's been three days and still the bill has not arrived; will it be done by today evening' - Minister Senthil Balaji interviewed

 

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் அண்ணாமலை குறித்து கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''பல்வேறு குற்றச்சாட்டுகளை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற நோக்கத்தில் வாய்க்கு வந்த கருத்துக்களை, குற்றச்சாட்டுகளை, அவதூறுகளைப் பரப்புகின்ற நோக்கத்தில் நீங்கள் சொல்லக்கூடிய நபரின் (அண்ணாமலை) செயல்பாடுகள் இருக்கின்றது. என்னுடைய சொத்துப் பட்டியலை பேரணி போகும்போது வெளியிடுவேன் என்று சொல்கிறார். ஏற்கனவே அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பொழுது அந்த நபருடைய சொத்துப் பட்டியலும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை வருடத்திற்கு முன்பு நடந்த தேர்தலின்போது இணைக்கப்பட்ட சொத்துப் பட்டியல் இருக்கிறது. நான் அதிகாரியாக பணிபுரியும்போது எவ்வளவு சம்பளம் வாங்கினேன், என்ன வருமானம் வந்தது என்பதெல்லாம் அதில் இருக்கும். எவ்வளவு அசையும் சொத்து; எவ்வளவு அசையாத சொத்து எல்லா விவரங்களும் அதில் இருக்கும் என்கிறார். அதை ஏன் மீண்டும் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

 

நான் சிம்பிளாக ஒரே ஒரு கேள்வி கேட்டேன் வாங்கின கடிகாரத்திற்கு பில் இருக்கா இல்லையா என்று. நீங்கள் தேர்தலுக்கு முன்னால் அந்த கடிகாரத்தை வாங்கி இருந்தால் கணக்கில் காட்டியிருக்க வேண்டும். தேர்தலுக்குப் பின்னாடி வாங்கி இருந்தால் ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தேன் பில்லை வெளியிடுங்கள் என்று. ஒரு மணி நேரம் முடிந்து ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் ஆகிவிட்டது. 'மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை' உங்களுடைய மடியில் கனம் இருக்கு. எனவே வழியில் பயந்துதான் போக வேண்டும். தூய்மையான அரசியல்வாதியாக இருந்தால், பில் இருந்தால் கொடுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே. இந்த டைமில் வாங்கினேன்; இந்தக் கடையில் வாங்கினேன்; இந்த விலைக்கு வாங்கினேன் என்று சொல்லலாமே. அதை ஏன் மறைக்க வேண்டும். ஏன் பேரணி போகும்போது வெளியிடுவேன் என்று சொல்லணும். முடிஞ்சா இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள அந்த நபர் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும். எந்தக் கடையில வாங்குனது; என்ன விலைக்கு வாங்கனது என்று நிரூபிக்க வேண்டும்.

 

ஒன்று பணம் கொடுத்து வாங்கி இருந்தால் அக்கவுண்டில் இருந்து அன்னைக்கு பணம் எடுத்திருக்க வேண்டும் அல்லது அக்கவுண்டில் இருந்து பணம் கொடுத்திருந்தால் அதற்கான எவிடன்ஸை நீங்கள் வெளியிட வேண்டும். யாரோ கொடுத்தது; யாருகிட்டையோ வெகுமதியாக வாங்கினது. அதனால் வெளியிட முடியவில்லை. பில் தயாராகிக் கொண்டிருக்கிறது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என்று சொல்லும் அந்த நபர், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு இதற்கும் சேர்த்து நான் கையெழுத்து வாங்குவேன் என்று ஒரு நடைப்பயணம் போலமே. 410 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் இன்னைக்கு 1,100 ரூபாயை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அதற்கும் சேர்த்து கையெழுத்து வாங்கலாம் அல்லவா. மக்கள் அதிலும் பாதிக்கப்படுகிறார்கள். சிலிண்டர் மானியம் அக்கவுண்டில் வரும் என்றார்கள், யாராவது ஒருவர் வாங்கி இருக்கிறீர்களா’' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

Next Story

ஆதீனத்துக்கு மிரட்டல்; பா.ஜ.க நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The court is acting on the bail plea of ​​BJP executives for intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு கடந்த 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது, குடியரசு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.