Skip to main content

“அரசு உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்..” - சி.வி.சண்முகம்

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

"This government should immediately conduct a caste-wise census ..." - CV Shanmugam

 

முன்னாள் சட்டத்துறை அமைச்சர்ரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி. சண்முகம் நேற்று விழுப்புரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் செயற்கையாக மின்தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி மாறிய மூன்று மாத காலத்தில் இந்தியாவிலேயே முதன்மையான முதல்வர் சிறந்த முதல்வர் என தன்னைத்தானே கூறும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஆட்சியில் ஏன் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. 


10 ஆண்டுகள் தொடர்ச்சியாக எங்கள் கட்சி ஆட்சி நடந்த போது அதே கட்டமைப்பு அளவு உற்பத்தி தான் தொடர்ந்தது. அப்போது மின்வெட்டு ஏற்படவில்லை; தற்போது மின்வெட்டு ஏற்பட்டதற்கு என்ன காரணம். இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மின்வெட்டு. திமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு என்ற பெயரில் தனியாரிடம் அதிக தொகைக்கு மின்சாரத்தை வாங்கி வெளி நாடுகளிலிருந்தும், தரமற்ற நிலக்கரியை அதிக விலைக்கு வாங்கி அதன்மூலம் சம்பாதிப்பதற்காக மின்வெட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஊழலுக்கு வழிவகுக்கும்.


தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. சமூக நீதி குறித்து பேசும் முதல்வர் ஸ்டாலின் அதை பின்பற்றவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது மிக மிக அவசியம். இந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் மாநிலம் தமிழகம். இங்கு 74 சதவீத மக்கள் வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் 18 சதவீதம், பழங்குடியின மக்கள் ஒரு சதவீதம் வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு மொத்தம் 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர்கள் 22 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். அதனால், சாதிவாரியாக கணக்கெடுத்து அந்த அளவிற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 


இதையெல்லாம் கேட்க வேண்டிய திருமாவளவன், சமூக நீதி குறித்து பேசுபவர் ஏன் மௌனமாக இருக்கிறார். உடனடியாக இந்த அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும். அப்படி நடத்தினால்தான், தமிழகத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தவிர்த்து 69 சதவீத இட ஒதுக்கீட்டையும் காப்பாற்றமுடியும். பெயரளவில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார் முதல்வர்.  


முடக்கப்பட்ட குணசேகரன் ஆணையம் மீண்டும் செயல்பட வேண்டும். தற்போது இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் நிதிஷ் குமார் மக்கள் தொகை கணக்கெடுப்பு சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். மகாராஷ்டிராவிலும் அதேபோல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என  கூறினார். 


இந்தச் சந்திப்பின்போது, அவருடன் நகரச் செயலாளர் ராமதாஸ், ஒன்றியச் செயலாளர் சுரேஷ்பாபு உட்பட பலர் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.