
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.
அதிமுக சார்பில் மதுரை திருமங்கலத்தில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அண்மையில் வெளியான திமுகவின் தேர்தல் அறிக்கையை ‘காலி பெருங்காய டப்பா’ என விமர்சித்திருந்தார். அதேபோல், அறிக்கை விட்டே பழக்கப்பட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின்; அரசாணை பிறப்பித்து பழக்கப்பட்டவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனவும் விமர்சித்துப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று (17.03.2021) மேற்கொண்ட பிரச்சாரத்தில், ''அடுத்த 10 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற முடியாது என ஜோதிடர்கள் கூறியுள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் அனைவரது வீட்டிலும் காலிங் பெல்லை தட்டி வாஷிங் மெஷின் வழங்கப்படும்'' என்றார்.