Skip to main content

“கமலின் மகள்தானே அவர்”- கமல் கையிலெடுத்த வாரிசு அரசியல். திருமுருகன் காந்தியின் பகிர் கேள்வி

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

மே பதினேழு இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி கொடுத்த பேட்டியில் இந்த வருடம் புதிதாக தேர்தலை சந்திக்கும் தமிழக கட்சிகள் பற்றி கேட்கப்பட்ட போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதான தன் அதிர்ப்தியை வெளிப்படுத்தினார். அப்போது அவர்...  

 

Thirumurugan Gandhi who asks the question of Kamal

 

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தமிழ்நாட்டின் அடிப்படை பிரச்சனைகளை அணுகுகிற கட்சியாக நான் பார்க்கவில்லை. அவருடைய வாக்குகள் அனைத்தும் தமிழ்நாட்டில் குழப்பத்தைக் கொண்டுவரக்கூடிய வாக்குகள்தான். எந்த தத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் தேர்தலை எதிர்கொள்கிறார்கள் என்றோ, பாஜகவை எதன் அடிப்படையில் மாற்றணும் என்பதையோ அவர்கள் இன்னும் சொல்லவே இல்லை. வாரிசு அரசியலை மாற்றவேண்டும் என்கிறார்கள். ஆனால், அடிப்படையில் வாரிசு அரசியல்தான் பிரச்சனையா? அப்படி என்றால் கமல்ஹாசனின் மகள் அவரைப் போல நடிக்கத்தானே வந்திருக்கிறார், அவர் மனைவி நடித்தவர் தானே, அவர் சகோதரர் நடித்தவர் தானே. அவரின் மகள் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்துவிட்டு நடிக்க வந்தாரா? கமலின் மகள்தானே அவர். வாரிசு என்பதால் மட்டும் முன்னுரிமைக் கொடுக்கப்பட்டால் அது எங்கு நடந்தாலும் கேள்விக் கேட்போம். அது வேறு விஷயம்.
 

நாங்கள் கேட்பது அவரின் தத்துவம் என்ன? பாஜக அரசு எத்தனை மசோதாக்களைக் கொண்டுவந்தது, எத்தனை சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது? ஏனென்றால், தேர்தல் என்பது சட்டம் இயற்றுபவர்களைத் தேர்ந்தெடுப்பது தான். இது கமல்ஹாசனுக்குப் புரியவில்லையா? ஒரு இடத்திலாவது இந்த ஐந்தாண்டுகளில் இயற்றப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறாரா? அப்புறம் எப்படி சட்டம் இயற்ற நாங்கள் போகிறோம்னு சொல்கிறார்? நாங்கள் அதைக் கேட்க விரும்புகிறோம். இந்த 5 ஆண்டுகளில் பாஜக இயற்றிய மக்கள் விரோத சட்டங்கள் பற்றி அவர் பேசட்டும், இல்லையென்றால் அவர் பாஜகவின் பி டீம் என்று தான் எங்களால் சொல்ல முடியும். பாஜகவின் எந்த கொள்கையையும், மசோதாக்களையும், சட்டங்களையும் நான் மக்கள் மத்தியில் கேள்வி எழுப்ப மாட்டேன் என்றால் அவரை என்ன சொல்வது. புதிய கல்விக் கொள்கை பற்றிப் பேசமாட்டேன், பாரத் மாலா பற்றிப் பேசமாட்டேன், சாகர் மாலா பற்றிப் பேசமாட்டேன், ஹைட்ரோ கார்பன் எக்ஸ்ப்ளோரேஷன் பாலிசி பற்றி பேசமாட்டேன், எக்னாமிக் பாலிசி பற்றிப் பேசமாட்டேன், வேற எதை பேசுவதற்காக பாராளுமன்றத்தில் போய் உட்கார போகிறீர்கள்? பாராளுமன்றத்திற்குப் போய் சினிமா வசனம் பேசுவீர்களா?
 

சட்டத்தை நிறைவேற்றுவதும், அதை அமல்படுத்துவதும், அந்த சட்டத்தின் மீதான விவாதங்களை எழுப்புவதும் தான் பாராளுமன்றத்தின் வேலை. அந்த அடிப்படை அரசியலை வைத்துதான் கேள்வி எழுப்பப்படணும். வாரிசு முன்னுரிமை எல்லா துறைகளிலும் இருக்கு. சினிமாவில், நீதி துறையில், அரசியலில் எல்லா இடங்களிலும் இருக்கு. ஆனால், அது தான் அனைத்து பிரச்சனைக்கும் மையமாக பேசுவது நேர்மையற்றது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.