Skip to main content

சிக்னலில் குறுக்கிட்டது யார்? - விசாரணையை தொடங்கிய சிபிஐ

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Who interfered in the scandal?-CBI initiated investigation

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தது உலக அளவில் சோகத்தையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க இந்திய ரயில்வே பரிந்துரைத்திருந்தது. அதன்படி நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே ஊழியர்கள், ரயில்வே அதிகாரிகள் உட்பட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

 

இந்த விபத்தில் தவறான சிக்னல் முக்கியக் காரணியாக இருக்கிறது. செய்தியாளர்களைச் சந்தித்திருந்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'இண்டெர்லாக்கிங் சிக்னல் சிஸ்டம் மிகவும் நம்பகமானது' என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த சிஸ்டத்தில் ஒரு சிக்னல் பழுதானால் அனைத்து சிக்னல்களும் சிவப்பு நிறமாக மாறி அனைத்து ரயில்களையும் நிறுத்தி விடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திட்டமிட்ட இடையூறு இல்லாமல் மெயின் லைனுக்கான பாதையை லூப் லைனுக்கு மாற்றுவது சாத்தியம் இல்லாத ஒன்று எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் சிக்னலில் குறுக்கிட்டது யார் என்பது தொடர்பான விசாரணையில் சிபிஐ மும்முரம் காட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரயிலில் பயங்கர தீ விபத்து; விரைந்த தீயணைப்புத் துறையினர்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Terrible train fire in maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நான்டெட் நகரில் ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில், பூர்ணா - பார்லி வழிச் செல்லும் ரயில் (வண்டி எண் : 07599) நின்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயிலில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 30 நிமிடத்திற்கு மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து, மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.