Skip to main content

வந்தே பாரத் திட்டத்தில் 11.23 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக தகவல்...! 

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

vande bharat

 

 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 11.23 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பெரும்பாலான நாடுகளில் சர்வதேச விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களது உறவினர்கள் வைத்த கோரிக்கை காரணமாக 'வந்தே பாரத்' எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் பிற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் இந்த திட்டத்தின் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

 

மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தா இது பற்றி கூறும்போது, "வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மொத்தம் 11.23 லட்சம் இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் மொத்தம் 22 நாடுகளில் வசித்தவர்கள். 500 சர்வதேச விமானங்கள் மற்றும் 130 உள்நாட்டு விமானங்கள் ஐந்தாம் கட்டத்தில் இயக்கப்பட்டுள்ளன" என்றார். 

 

இத்திட்டத்தின் ஆறாம் கட்ட நடவடிக்கையானது செப்டம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 24ம் தேதி வரை நடைபெற இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்திற்கு மற்றொரு வந்தே பாரத் ரயில் சேவை?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Another Vande Bharat train service to Tamil Nadu

இந்திய ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீலம் - வெள்ளை நிறம் மற்றும் காவி - சாம்பல் நிறத்திலும் இருக்கும் வகையில் இருக்கும் வகையில் வரை இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, கோயம்புத்தூர் - பெங்களூரு கண்டோன்மென்ட், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ஆகிய நகரங்கள் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே சார்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு!

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
 Extension of Chennai-Nellai Vande Bharat train to Nagercoil

இந்தியா ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. மேலும் நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 05.15 மணிக்குப் புறப்பட்டு மதியம் 02.10 மணிக்குத் நாகர்கோவிலுக்குச் சென்றடையும். அதே சமயம் மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில்  சென்னை எழும்பூருக்கு இரவு11:45 மணிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.