Skip to main content

குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு குறைகிறதா?- விரிவான தகவல்! 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

Is the value of a Member of Parliament's vote declining in the Presidential election? - Detailed information!

 

வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 708- லிருந்து 700 ஆக குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னர், புதிய குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பு குறையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

 

பொதுவாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குடியரசுத்தலைவர் தேர்தலில் ஒரு உறுப்பினரின் வாக்கு மதிப்பிடப்படுகிறது. தற்போது லடாக் மற்றும் ஜம்மு ,காஷ்மீரில் சட்டமன்றங்கள் இல்லாததால் குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு குறைய வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். 

 

கடந்த 2019- ஆம் ஆண்டு லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதற்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் 83 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.