Skip to main content

ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி,மீ வரை பயணிக்கலாம் - டாடா மோட்டார்ஸ்

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ஒரு முறை சார்ஜ் செய்து 200 கி.மீ வரை பயணிக்கக்கூடிய வகையில் தனது புதிய ரக மின்சார வாகனத்தை வடிவமைத்துவருவதாக அறிவித்துள்ளது. 

 

tata

 

காற்று மாசு மற்றும் எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட காரணங்களால் அநேக வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் வாகனங்களை மின்சாரம்கொண்டு இயங்கும் வடிவில் தயாரிப்பதில் ஈடுபட்டுவருகின்றன.


அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அதன் வாகனங்களில் சிலவற்றை மின்சாரம்கொண்டு இயங்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது அந்நிறுவனம் அதன் புதிய ரக வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 200 கி.மீ வரை பயணிக்கும் வகையில் வடிவமைத்துவருவதாக என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்