Skip to main content

தீபாவளிக்கு திருட்டு கரண்ட்; பணியிட மாற்றம் செய்ய லஞ்சம் - குற்றச்சாட்டுகளால் மோதிக்கொள்ளும் காங்கிரஸ், மஜத

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

''Stealing current for Diwali; Congress, Majda clash over allegations of 'money for job transfer'

 

கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திரா அதிகாரிகளின் பணியிட மாற்றத்திற்குப் பணம் வசூலிப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தொடர்ந்து குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்தார். இந்நிலையில் இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் அண்மையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, பணம் கேட்டு பேரம் பேசுவது போன்ற வீடியோ இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ காட்சி வெளியாகி கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

''Stealing current for Diwali; Congress, Majda clash over allegations of 'money for job transfer'

 

வெளியான வீடியோவில் பேசும் யதீந்திரா, ‘அப்பா... விவேகானந்தா என்பவர் எங்கே. மகாதேவிடம் நான் 5 எண்ணிக்கை பட்டியல் கொடுத்துள்ளேன். அவரிடம் தொலைபேசியை தாருங்கள். நான் கொடுத்ததை தவிர்த்து வேறு ஏதேதோ வருகிறது. இதை யார் தந்தார்கள் நான் கொடுத்ததை மட்டும் செய்யுங்கள்' என பணியிடம் மாற்றம் குறித்து பேசுவதாக அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

 

''Stealing current for Diwali; Congress, Majda clash over allegations of 'money for job transfer'

 

சித்தராமயாவின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என குமாரசாமி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள சித்தராமையா 'கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மட்டுமே இந்த வீடியோவில் பேசுகிறார். நானும் பார்த்தேன். நீங்கள் வீடியோவை நன்றாக பாருங்கள். ஏதாவது ஒரு இடத்திலாவது பணி மாற்றம் குறித்தோ, பணம் குறித்தோ அவர் பேசியுள்ளாரா? இதனை பணியிட மாற்றத்திற்கு தொடர்பு ஏற்படுத்தினால் எப்படி? அரசாங்கத்தில் பணியிட மாற்றம் என்பது மிகவும் சாதாரண நிகழ்வு. 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக அமைச்சராக பதவி ஏற்றேன். எனது இத்தனை வருட அரசியல் பயணத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் பணம் பெற்றுக் கொண்டு பணியிட மாற்றம் செய்தேன் என்று நிரூபித்தால் அரசியலை விட்டு வெளியேற தயார்' என்று தெரிவித்துள்ளார்.

 

''Stealing current for Diwali; Congress, Majda clash over allegations of 'money for job transfer'

 

தீபாவளி தினத்தன்று குமாரசாமி வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டி இருந்தது. இந்த விவகாரத்தை திசை திருப்பவே குமாரசாமி இதுபோன்ற ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை பரப்பி வருவதாக கர்நாடகா காங்கிரசினர் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.