Skip to main content

பாகிஸ்தான் எல்லைமீறித் தாக்குதல்... பொதுமக்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

 Pakistan cross-border attack

 

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பூஜ்ச், கெரன் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின், இந்த அத்துமீறல் தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உரி என்னும் இடத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் மற்றும் ராணுவ வீரர்கள் இருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

அதேபோல்  பாராமுல்லா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை உதவியாளர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அத்துமீறல் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவத்தின் மீது இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதில், 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்