Skip to main content

பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு; நிப்டி 14,800 புள்ளிகளில் வர்த்தகம்!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

mumbai national sensex, nifty



வாரத்தின் முதல் நாளான திங்களன்று (பிப். 22) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கின. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், தடாலடியாக 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 14,800 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.

 

மருந்து தயாரிப்பு துறைகள், நிதிச்சேவை துறைகளின் பங்குகள் பெருமளவு வீழ்ச்சி கண்டதே சந்தையின் சரிவுக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு சந்தைகளும் முதல் செஷனிலேயே கிட்டத்தட்ட 1 சதவீதத்திற்கு மேல் சரிவு கண்டிருந்தன. அதேநேரம், பங்குகளின் விலைகள் குறைந்தபோது சில்லரை முதலீட்டாளர்கள் பலரும் பங்குகளைக் கணிசமாக வாங்குவதும் நடந்தது. அந்நிய முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடுகளை அளித்து வருகின்றனர். 

 

''அமெரிக்காவில் பத்து ஆண்டுகால அரசு கடன் பத்திரங்களின் வளர்ச்சி 1.36 மடங்கு மட்டுமே பலன் தரக்கூடும் என்ற அறிவிப்பும், ஜோ பிடனின் 1.9 ட்ரில்லியன் டாலர் நிதி திரட்டும் புதிய பணக்கொள்கையும் கடுமையான பணவீக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் உலகளாவிய பங்குச்சந்தைகளிலும் சரிவை ஏற்படுத்தும்,'' என்கிறார் ஜியோஜித் நிதிச்சேவை நிறுவனத்தின் முதலீட்டுப் பிரிவு முதன்மை ஆலோசகர் வி.கே.விஜயகுமார்.

 

மேலும் அவர், ''மஹாராஷ்ட்ராவில் புதிய வகை கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதும் உள்நாட்டு பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்,'' என்றும் சொல்கிறார். 

 

அமெரிக்காவின் புதிய பணக்கொள்கையால் ஜப்பான் நாட்டு பங்குச்சந்தையிலும் சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியது. என்றாலும், இன்றைய வர்த்தகத்தின் பிற்பகுதியில் 1.0 சதவீதமும், கொரியா சந்தைகள் 0.4 சதவீதமும் மெதுவாக ஏற்றம் கண்டன. ஆனாலும், சீன பங்குச்சந்தைகள் 1.2 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. 

 

பகல் 1.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் அதிகபட்சமாக 918 புள்ளிகள் (1.84 சதவீதம்) சரிந்து 49,971 புள்ளிகளும், நிஃப்டி 240 புள்ளிகள் சரிந்து (1.61 சதவீதம்) 14,741 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகின.

 

நிஃப்டியில் ஜேஎஸ்டபுள்யூ, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டிருந்தன. அதேநேரம், எம் அண்டு எம், டெக் மஹிந்திரா, டாக்டர் ரெட்டி, ஆக்ஸிஸ் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி பங்குகள் 3 முதல் 5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரசிகர்களுக்கு தடியடி - சல்மான் கான் வீட்டில் பரபரப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
police lathi charge in Salman Khan fans

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மற்றும் தனது பிறந்தநாளின் வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் சல்மான் கான். அந்த வகையில் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, ரமலான் வாழ்த்து பெற அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது அவர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களை தடியடி நடத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சஜித் நதியாத்வாலா தயாரிக்க அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ரமலான் நாளான இன்று படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.