Skip to main content

‘மாட்டிக்கொண்டார் மோடி’.... ட்விட்டரில் ட்ரெண்டாகும் மோடி

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
modi


பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய ஏர் ஃபோர்ஸிடம் இருந்து ரூ.30,000 கோடி பணத்தை பிரதமர் மோடி சூறையாடி, அதை அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டார். இதை கடந்த ஒரு வருடமாக சொல்லிக்கொண்டு வருகிறோம். தற்போது ஆவணங்கள் வந்துகொண்டிருக்கிறது, அதில் பாதுகாப்பு அமைச்சகம் ஃபிரான்ஸ் அரசிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அதே சமயத்தில் பிரதமர் மோடியும் தனியாக ஃபிரான்ஸ் அரசிடம் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
 

“மனோகர் பரிகரை நேரில் சென்று பார்த்தது ரஃபேல் ஊழல் விவகாரமுக்காக இல்லை. அவருடைய உடல்நலத்தை விசாரிக்கதான் சென்றேன்” என்றார்.
 

“நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார். ஃபிரான்ஸின் முன்னாள் அதிபரே பிரதமர் மோடிதான் அனில் அம்பானியை தேர்வு செய்தார்” என்று கூறினார்.
 

இந்நிலையில், ட்விட்டரில் இந்தியளவில் #PakdaGayaModi என்று ட்ரெண்டாகி வருகிறது. பக்டா கயா மோடி என்றால் வசமாக மாட்டிக்கொண்டார் மோடி என்று அர்த்தமாம். அதேபோல முதலிடம் #RafaleDeal என்று ட்ரெண்டாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்