Skip to main content
Breaking News
Breaking

மகாராஷ்டிரா; வெகு வேகமாகக் குறைந்து வரும் கரோனா தொற்று!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
gf

 

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று மட்டும் 29,120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 26,616 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,05,326 ஆக அதிகரித்துள்ளது. 4,45,901 பேர் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து வருகிறார்கள். மேலும் இன்று 516 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 82,414 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 48,842 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 48,74,056 ஆக உயர்ந்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்