Skip to main content

மராட்டியத்தில் உச்சம் தொட்ட பாதிப்பு!! ஒரே நாளில் 7,862 பேருக்கு கரோனா பாதிப்பு!!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020
f

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்று 6,875 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 7,862 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,38,461 ஆக அதிகரித்துள்ளது. 1,05,836 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இன்று 226 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 9,893 பேர் கரோனா தொற்றால் இதுவரை மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 5,366 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 1,32,625 ஆக உயர்ந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்