Skip to main content

காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் கொலைதான் கூட்டணி முறிவுக்கு காரணமா? -பாஜக மாநில பொறுப்பாளர்

Published on 21/06/2018 | Edited on 21/06/2018
bjp

 

 

 

அண்மையில் காஷ்மீரில் பாஜக மற்றும் மஜக இடையேயான கூட்டணி முறிவடைந்தது. தற்போது காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைமுறையிலுள்ளது. இந்த கூட்டணி முறிவை அறிவித்த காஷ்மீர் பாஜக மாநில பொறுப்பாளர் ராம் யாதவ் இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் காஷ்மீர் போர்நிறுத்த கொள்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜக மஜகவின் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

 

ஆனால் தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த பாஜக மாநில பொறுப்பாளர் ராம் யாதவ், தீவிரவாதிகளுக்கு பாஜக என்றுமே அடைக்கலம் கொடுக்காது, கருணை காட்டாது இது பாஜகவின் புதிய கொள்கை. காஷ்மீரில் இந்த கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் அண்மையில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் புஹாரி கொலை செய்யப்பட்டதுதான் எனவும் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்