Skip to main content

இந்தியாவில் 111 நாட்களுக்கு பிறகு வெகுவாக குறைந்த கரோனா பாதிப்பு!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

jk

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,703 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 3.06 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றில் இருந்து 29.27 கோடி பேர் குணமாகியுள்ளனர். மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், நோய் தொற்றிலிருந்து குணமடையும் விகிதம் 97.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கரோனா காரணமாக 4,64,357 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 111 நாட்களுக்குப் பிறகு கரோனா தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்