Skip to main content

"மக்கள் கட்டுப்பாட்டுடன் இல்லையென்றால் முழு ஊரடங்கு தேவைப்படும்" - தமிழிசை பேட்டி!'

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

"Full curfew will be required if people are not in control" -Tamilisai Interview! '

 

பிரதம மந்திரியின் 'இலவச அரிசி வழங்கும்' திட்டத்தின் கீழ், புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கதிர்காமம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைத்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. தயவுசெய்து அனைவரும் கரோனா நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும். என்னைப் பார்த்து மாஸ்க் அணிய வேண்டாம், கரோனாவைத் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டோடு இருந்தால் கரோனா கட்டுப்பாடாக இருக்கும். 29-ல் இருந்து 40 வயது உள்ளவர்களை கரோனா தாக்குகிறது. அதனால் எச்சரிக்கையுடன் இருக்கவும். முதல்வருடன் மக்கள் நலன் வேண்டி இனக்கமாகச் செயல்பாடுகள் இருக்கும். நாள்தோறும் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

 

"Full curfew will be required if people are not in control" -Tamilisai Interview! '

 

ஊரடங்கு மட்டுமே கரோனாவைக் கட்டுப்படுத்தும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆகவே மக்கள் சுயக் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாடுடன் இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். நோய்த் தொற்று அதிகரித்து பின்பு மருத்துவமனை வருவதால் நோய்த் தொற்றால் பாதித்த முதியவர்களின் இறப்பு விகிதம் தற்போது அதிகரித்து வருகிறது" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.