Skip to main content

டிராக்டர் பேரணி உறுதி - விவசாயச் சங்கங்கள் அறிவிப்பு!

Published on 25/01/2021 | Edited on 26/01/2021

 

h

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின், புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 50 - நாளை கடந்து விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் குடியரசு நாளில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், நாளை கண்டிப்பாகப் பேரணி நடத்தப்படும் என்று விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்