Skip to main content

இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜெய்ஷ் இ முகமது...!

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

இஸ்ரோ அம்மைப்பின் முன்னாள் தலைவரான மாதவன் நாயருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.

 

death thread for former isro chairman madhavan nair

 

75 வயதான மாதவன் நாயர் கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் தற்போது வசித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு பாஜக வில் இணைந்தார். இந்நிலையில் தற்போது இவரது வீட்டிற்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பெயரில் வந்துள்ள அக்கடிதத்தில் பாஜக வுக்கும், மோடிக்கும் ஆதரவு கொடுத்தால் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து மாதவன் நாயர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் இந்த கடிதம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்