Skip to main content

பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து!

Published on 14/01/2022 | Edited on 14/01/2022

 

Prime Minister Narendra Modi wishes Pongal in Tamil!

 

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையும், வட மாநிலங்களில் மகர சங்கராந்தியையும், மக்கள் வழக்கான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் மக்களுக்கு பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

 

பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு வாழ்த்துகள். இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்" என்று தமிழில் குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் மு.க. ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Chief Minister MK Stalin Ramalan wishes 

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ரமலான் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். கல்வியை ஆண், பெண் இருவருக்கும் சமமாக்கியது. நீதி மற்றும் அமைதியை வலியுறுத்தியது, ஏற்றத்தாழ்வை அறவே எதிர்த்தது. சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்தியது என அவர் காட்டிய வழி அனைவரும் பின்பற்றத்தக்கதாகும். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம்.

அவரது வழியில் வாழ்ந்து வரும் இசுலாமியத் தோழர்களின் நலன் காக்கும் அரசாகக் திமுக அரசு திகழ்ந்து வருகிறது. கடந்த 2007 இல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது. மிலாதுநபிக்கு அரசு விடுமுறை. இசுலாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு என எத்தனையோ சாதனைகளைச் செய்த கலைஞரின் வழியில், எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டைக் கொண்ட திராவிட மாடல் அரசும் அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

அதன்படியே, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசின் வாழ்நாள் அங்கீகாரம், மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழை நிரந்தரச் சான்றிதழாக வழங்க அரசாணை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு. இனி 5 லட்சம் வரை கல்விக்கடன். இஸ்லாமிய மக்களுக்கான அடக்கஸ்தலங்கள் (கபர்ஸ்தான்) இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பில் கபர்ஸ்தான் அமைப்பதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கி அரசாணை என அண்மையில் எண்ணற்ற அறிவிப்புகளை  வெளியிட்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம். முத்தாய்ப்பாக மத்திய பா.ஜ.க. அரசு நிறுத்திவிட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை (Pre-matric scholarship), தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறோம். இசுலாமியரைப் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி, இசுலாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக என்றும் முன்னிற்கும் பெருமிதத்தோடு, உரிமையோடு இசுலாமியத் தோழர்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

வழுக்கு மரம் ஏறும் போட்டி; தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
slippery tree climbing competition; Falling young man lose thier live

பொங்கல் திருநாளை தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் நாடுகளிலும் கொண்டாடி வருகின்றனர். தை மாதம் முழுவதும் கோலாகலமாகவே இருக்கும். அதேபோல் பல ஊர்களில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. வழுக்கு மரம் ஏறுதல் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமான போட்டி. உயரமான கம்பத்தின் உயரத்திற்கு ஏற்ப வீரர்களின் எண்ணிக்கையும் அமையும். கிரீஸ், எண்ணெய் தடவிய வழுக்கு மரத்தின் உச்சியில் உள்ள பணமுடிப்பை எடுக்க ஒருவர் மீது ஒருவராக 5 முதல் 7, 8 பேர்கள் வரை ஏறி எடுக்க அனுமதிக்கப்படுவர்.

கயிறு வழியாக ஏறக்கூடாது, சட்டை அணிந்து ஏறக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். 50 அடி உயரம் கொண்ட மரங்களில் கூட குழுவாக ஏறி பரிசுத் தொகையை எடுத்துச் செல்வது வழக்கம். இதேபோல ஆலங்குடி அருகே உள்ள சம்மட்டிவிடுதி கிராமத்தில் அங்குள்ள பள்ளி வளாகத்தில் இளைஞர்கள் சார்பில் நேற்று மாலை வழுக்கு மரம் நடப்பட்டு தயாராக இருந்தது. அதே ஊரைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜயகுமார் (38) வழுக்கு மரம் சாயாமல் இருக்க பாதுகாப்பிற்காக இழுத்து கட்டப்பட்டிருந்த ஒரு கயிற்றில் ஏறியபோது கீழே நின்றவர்கள் கூச்சல் போட்டு இறங்கச் சொன்னதையும் கேட்காமல் மரத்தின் உச்சியைத் தொட முயன்றபோது தவறி கீழே விழுந்தார். பேச்சு மூச்சின்றி கிடந்தவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து சம்மட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.