Skip to main content

இதுதான் தூய்மை திட்டமா? அற்றுப்போன மனிதாபிமானம்...!! 

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

 Is this the cleaning plan? Cut off humanity ... !!

 

மாநகராட்சி அதிகாரிகளால் ஏழை எளிய ஆதரவற்ற முதியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட செயல் கண்டனங்களை பெற்றுவருகிறது.

 

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள ஷிப்ரா ஆற்றங்கரை ஓரத்தில் திடீரென வந்து நின்றது ஒரு வாகனம். அந்த வாகனத்தில் இருந்து 10 -க்கும் மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்றவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் கீழிறக்கப்பட்டனர். அவர்கள் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டதை தெரிந்துகொண்ட அங்கிருத்தவர்கள் வலுக்கட்டாயமாக அவர்கள் கீழிறக்கப்பட்டதை வீடியோவாக பதிவு செய்தனர்.

 

அதன்பின்தான் தெரிந்தது, வந்தது இந்தூர் மாநகராட்சியின் வாகனம் என்று. ‘ஏன் ஆதரவற்ற முதிவர்களை இங்கே இறக்கி விடுகிறீர்கள்’ என மாநகராட்சி ஊழியர்களிடம் அங்கிருந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் தூய்மை இந்தூர் திட்டத்திற்காக அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கொடுக்கப்பட்ட உத்தரவை தாங்கள் நிறைவேற்றியதாக சொல்லிவிட்டு ஊழியர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.

 

முதியவர்களை இறக்கிவிடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி, பெரும் கண்டனத்தைப் பெற்றுவருகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜிசிங் சவுகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு சமமான சேவை. இந்தச் சம்பவத்தை சகித்துக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தூய்மை திட்டம் என்பது குப்பைகளை அகற்றுவதா? ஏழைகளை அகற்றுவதா?  என கேள்வியெழுப்பி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

சார்ந்த செய்திகள்