Skip to main content

100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து; 4 பேர் உயிரிழப்பு 

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

A bus fell into a 100-foot ravine in Andhra pradesh

 

ஆந்திரா மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், படேரு பகுதியில் மோதலம்மா கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் உள்ள சாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். இந்த கோவிலுக்குச் செல்ல மலைப் பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். இதற்காக மாநில அரசு சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மோதலம்மா கோவிலுக்குச் செல்ல சோடாவரத்தில் இருந்து படேரு நோக்கி நேற்று (20-08-23) அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. அந்த பேருந்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

 

சமீபத்தில் பெய்த கன மழையால் சற்று கீழ் நோக்கிச் சாய்ந்திருந்த மரக்கிளைகள் மீது படாமல் இருக்க பேருந்தை, ஓட்டுநர் சற்று இடது புறமாகத் திருப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 100 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பள்ளத்தாக்கில் மரக்கிளைகள் சிக்கி பேருந்து தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  உடனடியாக, அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை விசாகப்பட்டினம், படோரு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்தில் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மலைப் பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Stone pelting on Jagan Mohan Reddy


ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு தீவிர பரப்புரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.