Skip to main content

புரூக்ஃபீல்டு இண்டியா ரியல் எஸ்டேட் ஐபிஓ வெளியீடு தொடங்கியது! நாளை கடைசி!!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

Brookfield India Real Estate IPO Launches! Tomorrow is the last !!

 

இந்திய பங்குச்சந்தையில், புரூக்ஃபீல்டு இண்டியா ரியல் எஸ்டேட் டிரஸ்ட் நிறுவனம் ஐபிஒ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டை புதன்கிழமை (பிப். 03) தொடங்கியுள்ளது.

 

இதற்கு முன்பு கடந்த 2019ல் எம்பஸி பார்க்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனமும், கடந்த 2020ம் ஆண்டில் பிளாக்ஸ்டோன் குரூப் & மைன்ட் ஸ்பேஸ் பிஸினஸ் பார்க்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனமும் ஐபிஓ வெளியிட்டு முதலீட்டை திரட்டின. இவ்விரு நிறுவனங்களைத் தொடர்ந்து பொதுப்பங்கு வெளியீட்டில் கால் பதிக்கும் மூன்றாவது ரியல் எஸ்டேட் நிறுவனம் இதுவாகும். 

 

நடப்பு 2021ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை ஐஆர்எஃப்சி, இண்டிகோ பெயிண்ட்ஸ், ஹோம் ஃபர்ஸ்ட் பைனான்ஸ், ஸ்டவ் கிராஃப்ட் நிறுவனங்களைத் தொடர்ந்து ஐபிஓ வெளியிடும் ஐந்தாவது நிறுவனம் புரூக்ஃபீல்டு இண்டியா ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும். 

 

தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை ஆகிய இரண்டிலும் இப்பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன. 

 

ஆம்பிட், ஆக்ஸிஸ் கேபிடல், ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ், ஜேஎம் பைனான்சியல், ஜேபி மோர்கன் இண்டியா, கோடக் மஹிந்திரா கேபிடல் கம்பெனி, எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் புரூக்ஃபீல்ட் இண்டியா ஐபிஓவை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிறுவனத்தின் ஐபிஓ விற்பனை பிப். 3ஆம் தேதி தொடங்கி, பிப். 5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக 275 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

ஐபிஓ மூலமாக இந்நிறுவனம் மொத்தம் 3800 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே துறை சார்ந்த முதலீட்டாளர்களிடம் (ஆன்கர் இன்வெஸ்டார்ஸ்) 1710 கோடி ரூபாய்க்கு ஐபிஓக்களை விற்பனை செய்துள்ளது. 

 

ஒரு லாட் சைஸ் 200 யூனிட்டுகளாகவும், அதன் மடங்காகவும் ஐபிஓவில் முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 200 யூனிட்டுகளை 55 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டி வரும்.

 

புரூக்ஃபீல்டு இண்டியா ரியல் எஸ்டேட் டிரஸ்ட் நிறுவனம், இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ளது. பிரம்மாண்டமான பரப்பளவில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களைக் கட்டுவதில் நீண்டகால அனுபவம் மிக்கது. 

 

மேலும், இதன் சகோதரி நிறுவனமான புரூக்ஃபீல்டு அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் இணைவு பெற்ற நிறுவனம் ஆகும். உலகளவில் அசெட் மேனேஜ்மெண்டில் சுமார் 575 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி நடவடிக்கைகளைப் பராமரித்து வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே ட்வீட்... உலக பேமஸ் ஆன தாத்தா

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 A single tweet... a world famous grandfather

 

ட்விட்டரில் ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்த ஒரே நாளில் உலக பேமஸ் ஆகியுள்ளார் ஒரு முதியவர்.

 

ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட ட்விட்டர் வீடியோ பதிவில் கால் சட்டையுடன் நிற்கும் முதியவர் ஒருவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அந்த முதியவர் தனக்கு எல்.என்.டியில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளேன். 21 கோடி ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவன பங்குகள்; ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கர்நாடக வங்கியின் பங்குகளை வைத்திருப்பதாகவும், இருந்தாலும் தான் எளிய வாழ்க்கை தான் வாழ்ந்து வருவதாய் அசால்ட்டாக புட்டு புட்டு வைத்தார். ஆனால், இது உண்மையா பொய்யா என தெரியாமல் வீடியோவை பார்ப்பவர்கள் குழம்பி வருகின்றனர். சிலர் அந்த முதியவர் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை தான் வைத்துள்ளார். ஆனால் மாற்றி சொல்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். எப்படியோ ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் அந்த தாத்தா.

 

 

 

Next Story

அதிகாரிகளின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்.. முன்னாள் தலைமை செயல் அதிகாரி கைது

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

Ex-CEO Arrested in Case of Cell Phone Polling of Stock Market Officials

 

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனை பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

 

2013 முதல் 2016 வரை தேசிய பங்குச்சந்தையில் நிர்வாக இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா மீது செபி பல்வேறு புகார்களை முன்வைத்தது. பங்குச்சந்தையின் ரகசியங்களை சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியாருடன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்துவருகிறது.

 

இதனைத் தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ஆனந்த் சுப்பிரமணியத்தை கைது செய்தது. பங்குச்சந்தை முறைகேட்டிற்காக இருவருக்கும் தலா ரூ. 5 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கிடைக்காததால் அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில் பங்குச் சந்தை ஊழியர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதற்காக சித்ரா ராமகிருஷ்ணா மீதும் மும்பையின் முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே மற்றும் ரவி நரேன் ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை புதிதாக வழக்குகளைப் பதிவு செய்தது. இது குறித்து சிறையில் இருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறையினர்  விசாரணை நடத்திய நிலையில், பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனிடமும் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவரையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். 

 

கைது செய்யப்பட்ட ரவி நரேன் 1994 முதல் 2013 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.