Skip to main content

''மதுபான தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்க ரூ.90 கோடி லஞ்சம்''- முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு!

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

"Bribery of Rs. 90 crores to grant licenses to liquor factories"- Former Chief Minister Narayanasamy accused!

 

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது பேசிய அவர், " அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது. பாஜக தன்னை அசைக்க முடியாத சக்தி என்ற மாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டி விட்டு, எதிர்கட்சிகளை பிரித்து மீண்டும் ஆட்சிக்கு பா.ஜ.க முயற்சிக்கின்றது. இதனால் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த திட்டமிட்டுள்ளார்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் இதற்கான முயற்சி எடுக்கின்றார்கள்.

 

இப்போது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் மோடி ஆட்சியில் 25 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் சென்றுவிட்டனர்.

 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்குவேன் என்று வாக்குறுதி கூறி வந்த ரங்கசாமி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசு ஒப்புக்கொள்ளாத நிலையில் மாநில அந்தஸ்து கேட்கும் ரங்கசாமியின் அரசு போலி அரசாக செயல்படுகின்றது. இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்காததால் இந்த அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது.

 

புதுச்சேரியில் மதுபானம் தயாரிக்க 6 நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிமம் கொடுக்க ரூ.15 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக ஆளுங்கட்சி உறுப்பினரே சட்டப்பேரவையில் வெளிப்படையாக பேசியும் முதல்வரிடத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆளுங்கட்சி உறுப்பினரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

 

இந்திரா காந்தி காந்தி காலத்திலும்  தலைவர்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார்கள். அதனால் காங்கிரஸ் எந்த பின்னடைவையும் எப்போதும் அடையாது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி வரவேண்டும் என்பது எனது விருப்பம். அவர் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தப்படும். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும்"  என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.