Skip to main content

குஜராத்தில் மோடி அரசை கலைக்க விரும்பினார் வாஜ்பாய்.. யஷ்வந்த் சின்ஹா அதிரடி பேச்சு!

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

குஜராத்தில் 2002- ஆம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது குஜராத்தில் பாஜக தலைமையிலான அரசில் அம்மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்நிலையில் குஜராத்தில் நடந்த கலவரத்தால் நரேந்திர மோடியை பதவியை விட்டு நீக்கவும், குஜராத் அரசை கலைக்கவும் அப்போதைய பிரதமர் அடல் பீகாரி வாஜ்பாய் முடிவு செய்து இருந்ததாகவும், ஆனால் அப்போதைய இந்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி குஜராத்தில் ஆட்சி கலைத்தால் , தான் பதவியை விட்டு விலகி விடுவேன் என வாஜ்பாயிடம் அத்வானி தெரிவித்ததால் தான் குஜராத் அரசு கலைக்கும் முடிவை வாஜ்பாய் கைவிட்டார் என பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்தவரும், பாஜகவின் மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்ஹா போபாலில் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

 

VAJPAYEE

 

மேலும் அவர் கூறுகையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது சொந்த பயணத்திற்கு போர் கப்பலை பயன்படுத்தினரா? என்பது தொடர்பான விளக்கத்தை அப்போதைய கடற்படை அதிகாரிகள் கொடுத்துள்ளனர். ஒரு நாட்டின் பிரதமராக இருந்துக் கொண்டு இப்படி பொய் பேசியிருக்கக் கூடாது என பிரதமரை யஸ்வந்த் சின்ஹா கடுமையாக சாடினார். 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி அதன் பிறகு பாஜகவின் மூத்த தலைவர்களை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஓரங்கட்டியுள்ளார் என்றார் மிகையாகாது.

 

VAJPAYEE

 

இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் புதிய அரசு பதவி ஏற்கும் விழாவில் அத்வானி பிரதமருக்கு வணக்கம் தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி அத்வானி அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை. இந்த செய்தி சமூக வலைத்தளங்கள், செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாஜக கட்சியை உருவாக்கி அதை மிகப்பெரிய கட்சியாக மாற்றியவர் அத்வானி ஆவர். இவருக்கு ஆதரவாக பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.