Skip to main content

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

Army helicopter crash in Kashmir

 

ஜம்மு காஷ்மீரில் சீட்டா ரக ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

 

ஜம்மு காஷ்மீரின் குரோஸ் அருகே இந்திய ராணுவத்தில் பயன்படுத்திவந்த சீட்டா ரக ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி இருக்கிறது. பனி படர்ந்த பாரம் என்ற பகுதிக்குள் ஹெலிகாப்டர் நுழைந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் பயணித்த வீரர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.  

 

இதேபோல் கடந்த வருடம் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்