Skip to main content

புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும்- சிவசேனா மோடிக்கு கோரிக்கை...

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

நாடு முழுவதும் இசுலாமிய பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

shiv sena

 

 

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்தது இலங்கை அரசு. இதனையடுத்து இலங்கையை போன்று பயங்கரவாதிகள் தங்களின் அடையாளங்களை மறைத்து தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கில் புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சிவசேனாவின் நாளேடான சம்னாவில் வெளியிடப்பட்டுள்ளது.
 

மேலும், முத்தலாக்கை தடை செய்தது போல் பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்வதும் அவசியம் என பிரதமர் மோடிக்கு சிவ சேனா வலியுறுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்