Published on 16/07/2019 | Edited on 16/07/2019
ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திரா மாநில ஆளுநராக பிவி நரசிம்மன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ஆளுநராக அனுசூயா உய்கே நியமிக்கப்பட்டுள்ளார்.