
பிரபல நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்.பியுமான நடிகை ரம்யா மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகை ரம்யா நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரம்யாவிற்கு நெருக்கமானவர்களுக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போது நலமுடன் இருப்பதாகவும் இது தவறான செய்தி என்றும் மறுத்துள்ளனர். மேலும் ரம்யாவின் தோழியும் பத்திரிகையாளருமான சித்ரா சுப்ரமணியம் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், தற்போது ரம்யாவுடன் பேசியதாகவும், அவர் நாளை ஜெனிவாவில் இருந்து பிராக் நாட்டிற்குச் செல்வதாகவும் அதன் பிறகு அவர் பெங்களூரு திரும்புவார் என்றும் பதிவிட்டுள்ளார்.
நடிகை ரம்யா, தமிழில் பொல்லாதவன், கிரி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரம்யா, எம்.பியாகவும் இருந்துள்ளார்.