Skip to main content

உத்ரகாண்ட்டில் பேருந்து விபத்து 47 பேர் பலி !! 12 பேர் கவலைக்கிடம் !!

Published on 01/07/2018 | Edited on 01/07/2018

 

 

accident

 

 

 

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் மலை பாதையில் பேருந்து விபத்துக்குள்ளாகி 47 பேர் பலியான சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

உத்தரகாண்ட் மாநிலம் பாரிகார்வால் மாவட்டத்தில் நனிதண்டா என்ற மலை பகுதியில் 60 பேருடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலை சாலையின்  விளிம்பில் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

 

 

இன்று நடந்த இந்த கோர விபத்தில் இதுவரை 47 பேர் இறந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கூறுகையில், இந்த கோர விபத்து மலை பள்ளத்தில் நடந்துள்ளதால் மீட்பு நடவடிக்கை பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

 

இதுவரை 47 பேரின் சடலங்களை மீட்டுள்ளோம். 12 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். மற்றவர்கள் பற்றிய நிலை தெரியவில்லை. தொடர்ந்து மீப்பு பணியில்  இறங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.   

சார்ந்த செய்திகள்