தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பள்ளியை நடத்தி வருபவர் அரவிந்த். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் புதுச்சேரி கடலில் 75 அடி ஆழத்தில் அரியாங்குப்பம் அருகே ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏற்றினார். இதேபோல் சென்னை நீலாங்கரை கடற்கரை பகுதியில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை அவர் ஏற்றினார். இவர் ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட், உலக யோகா தினம், காதலர் தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்வுகளை கடலுக்கு அடியில் நிகழ்த்தியுள்ளார்.
ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஏற்றி சாகசம்!
Advertisment