Skip to main content

ஜெயலலிதா பிறந்த நாளை மறக்கடிக்க செய்த மோடி !

Published on 24/02/2018 | Edited on 24/02/2018

ஜெயலலிதா பிறந்த நாளில் அவரது சிலையை(?) அதிமுக தலைமையகத்தில் திறந்து வைத்துவிட்டதோடு ஜெ.புகழ் பாடுவதை நிறுத்துக்கொண்டனர் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள். மாறாக, இன்று மாலை கலைவாணர் அரங்கில் மகளிர்க்கான மானிய விலை ஸ்கூட்டி திட்டத்தை துவக்கி வைக்க வரும் பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி செய்திருக்கும் ஏற்பாடுகள் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஐ.என்.எஸ். ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்திறங்குகிறார் மோடி. அங்கிருந்து நிகழ்ச்சி நடக்கும் கலைவாணர் அரங்கத்திற்கு கார் மூலம் பயணம். ஹெலிகாப்டர் தளத்திலிருந்து கலைவாணர் அரங்கத்துக்கு செல்லும் மோடிக்கு வழியெங்கும் தாரை தப்பட்டையுடன் மேளதாளங்கள் முழங்க ஏக வரவேற்புக்கொடுக்கின்றனர். வழி நெடுக அதிமுக தொண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தைக்காட்டி மோடியை அசத்துவதற்காக பல மாவட்டங்களிலிருந்தும் ஆட்களை இறக்குமதி செய்திருக்கிறது எடப்பாடி தரப்பு. முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கார்டனிலிருந்து ஜெயலலிதா புறப்பட்டால் எந்தளவுக்கு அமர்க்களமாக வரவேற்பு ஏற்பாடுகளை அதிமுக பெருந்தலைகள் செய்வார்களோ அதே போன்று அதகளப்படித்தியுள்ளனர். அதைப்பார்த்து ஆதங்கப்படும் ஜெயலலிதா விசுவாசிகள்,

admkpartymember

அதிமுக தொண்டர் தலையில் பா.ஜ.க தொப்பியை அணிவித்து
பிரதமர் மோடியை வரவேற்க நிற்கிறார்.

" ஜெயலலிதா பிறந்த நாளையே மறக்கடிக்க செய்துவிட்டார் மோடி. அந்தளவுக்கு மோடி மோகம் எடப்பாடியைப் பிடித்து ஆட்டுகிறது. இப்படியே போனால் அதிமுகவின் அகில இந்திய தலைவராக மோடியை எடப்பாடி அறிவித்தாலும் அறிவித்துவிடுவார்" என புலம்புகின்றனர்.

- இளையர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.