Skip to main content

உங்களை அரசியலில் இருந்து ஒழிக்காமல் விடமாட்டேன்! நீயா? நானா? அ.தி.மு.க பவர் ஃபைட்!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

sss

 

என்னை அசிங்கப்படுத்தறார் அமைச்சர் என அ.தி.மு.க.வின் மாநில நிர்வாகியான முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தலைமையிடம் புலம்பியுள்ளார். துணை முதல்வர் பஞ்சாயத்து செய்தும் பிரச்சனை தீராமல், உங்களை அரசியலில் இருந்து ஒழிக்காமல் விடமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஒருவர் களமிறங்க, பரபரப்பாகவே உள்ளது திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க.

 

திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக 'தூசி' மோகனும், வடக்கு மாவட்டத்துக்குள் வரும் ஆரணி தொகுதியின் எம்.எல்.ஏவாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனும் உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து ஆரணி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ, வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளர் பாபுமுருகவேலை ஒதுக்குகிறார்கள் என்கிற குரல்கள் வருகின்றன. கடந்த வாரத்தில் ஆரணி நகரில், வடக்கு மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிக்கு நிர்வாகிகள் நியமனத்துக்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த பாபுமுருகவேல், மா.செ 'தூசி' மோகனிடம், என்னை எதுக்குக் கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் அழைப்பதில்லை எனக் கேட்டுள்ளார்.

 

ddd

 

"நான் ஏன் உன்னை அழைக்கனும் என மா.செ பதில் சொல்ல. நானும் கட்சியில மாநில நிர்வாகியா இருக்கன். நீ மாநில நிர்வாகினா, அங்க நடக்கறதில் போய் கலந்துக்க, உன்னை இங்க அழைக்க முடியாது" எனக் காரசாரமாக விவாதமானது. அடுத்ததாக ஆரணி ஒ.செ சேகர், கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்து கேள்விப்பட்டு பாபுமுருகவேல் வந்துள்ளார். அவர் வருவதைக் கேள்விப்பட்டு அந்த நிகழ்ச்சியை அமைச்சரும், மா.செவும் ரத்து செய்துள்ளனர். அதற்கு முன்பு இளைஞர் - இளம்பெண் பாசறை உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த பாபுக்கு மேடையில் நாற்காலி தராமல் அவமானம் செய்தனராம்.

 

dddd

 

இதுபற்றி கட்சி முக்கியஸ்தர்களிடம் நாம் கேட்டபோது, பாபுமுருகவேலுக்கு ஆரணி பூர்வீகமாக இருந்தாலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதால், சென்னையில் செட்டிலாகிவிட்டார். 2011 -இல், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக ஜெயித்து அ.தி.மு.கவுக்கு வந்தவர். தொகுதிப் பக்கம் வரமாட்டார். ஓ.பி.எஸ் சைடிலிருந்து இ.பி.எஸ் ஆதரவாளராக ஆனவருக்கு ஆரணியில் போட்டியிடும் ஆசை வந்துவிட்டது. அதனால்தான் அமைச்சரும், மா.செவும் தடுக்கிறார்கள். அதற்குக் காரணம், பாபுமுருகவேலை இயக்குவது அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், முன்னாள் மா.செவும், அமைப்புச் செயலாளருமான முக்கூர்.சுப்பிரமணி தான்.

 

Ad

 

கடந்த காலங்களில் முக்கூர் சுப்பிரமணியிடம்தான் சேவூர் ராமச்சந்திரனும் தூசி மோகனும் இருந்தனர். அரசியல் காற்று சுழற்றி அடித்ததில் இப்போது அவர்கள் கை ஓங்கிவிட்டது. 3 ஆண்டுகள் பொறுமையாக இருந்த முக்கூர் இப்போது இ.பி.எஸ்ஸிடம் நெருங்கி அமைப்புச் செயலாளராகி, மறுபடியும் அரசியலைக் கலக்க, பாபுமுருகவேலைக் கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள்.

 

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வர் ஆய்வுக் கூட்டத்துக்கு வந்தபோது, முதல்வரை வரவேற்கவோ, நெருங்கவோ முக்கூர்.சுப்பிரமணியை அனுமதிக்கக் கூடாது, அப்படி நடந்தால், ஒதுங்கியுள்ள, தன்மீது அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகள் அவர் பின்னால் திரளுவார்கள் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மா.செ மோகன் இருவரும் திட்டமிட்டு, அவர் பெயரை பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனால் முதல்வர் அலுவலக உத்தரவுப்படி மக்கள் பிரதிநிதிகளாக இல்லாத முக்கூர் சுப்பிரமணி, பாபுமுருகவேல் இருவர் பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் முதல்வருடன் அனுமதிக்கப்பட்டனர். இது அமைச்சர், மா.செ தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்கிறது அ.தி.மு.க தரப்பு.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.