Skip to main content

சபாநாயகர் இருந்தாதானே தீர்மானம் கொண்டு வருவீங்க... ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக அதிரடி ப்ளான்?

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

அதிமுக தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தினம்தினம் புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. சபாநாயகர் மீது கடந்த 1ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த மனுவை சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் கொடுத்தார். இதுகுறித்து நேற்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது இன்னும் சட்டமன்றம் கூடுவதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை. சட்டமன்றம் கூடியவுடன் எங்களது நடவடிக்கைகளை பார்ப்பீர்கள், Wait and See எனக்கூறினார். 
 

admk



இந்நிலையில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அதிமுக ஒரு அதிரடி திட்டத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போது சபாநாயகராக இருக்கும் தனபாலை ராஜினாமா செய்யவைத்து அந்த இடத்திற்கு வேறொருவரை கொண்டுவருவதுதான் அவர்களின் ப்ளான். அந்த இடத்திற்கு வேறொருவரை கொண்டுவருவதன்மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடியாகிவிடும். இதன்மூலம் இன்னும் ஒரு ஆறு, ஏழு மாதத்திற்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் ஆட்சி நடத்தலாம். 

தனிப்பெரும்பான்மை இருந்தும் ஏன் இந்த முடிவு என்ற கேள்விக்கும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர். 97 ஆக இருந்த திமுக கூட்டணியின் பலம்  இடைத்தேர்தலுக்கு பிறகு 110 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக கூட்டணியின் பலம் 123 ஆக குறைந்துவிட்டது. இருந்தாலும் இப்போதும் தனிப்பெரும்பான்மையில்தான் உள்ளோம். ஆனால் அதிமுக கூட்டணியில் அவரவர் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர்கள், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் தனபால் மீது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என 25 பேர் உள்ளனர். இவர்கள் ஒருவேளை மாற்றி வாக்களித்துவிட்டால் சபாநாயகரை மாற்றவேண்டி வரும்.

இதைத்தொடர்ந்து அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் திமுக. இதிலும் மாற்றி வாக்களித்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும். இவற்றை தடுக்கவே சபாநாயகர் தனபாலை ராஜினாமா செய்யவைக்க நினைக்கின்றனர் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும். தனபாலுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அவரை சமாதானப்படுத்தலாம் எனவும் முடிவு செய்துள்ளார்களாம். இப்படி அடுத்தடுத்து நிறைய மாற்றங்கள் காத்திருக்கின்றன எனக் கூறுகின்றனர் அரசியல் ஆலோசகர்கள்.

 

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.