Skip to main content

தமிழகம்: மாலை 5 மணி வரை 63.60% வாக்குப்பதிவு!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

tn assembly election polls turnout till 5 pm status

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கிய நிலையில், அமைதியான முறையில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இன்று இரவு 07.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பிபிஇ (PPE) கிட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் துணை ராணுவப்படையினர், மாநில காவல்துறையினர் உட்பட 1.58 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் இன்று (06/04/2021) மாலை 05.00 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாகப் பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 50.05% வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

tn assembly election polls turnout till 5 pm status

 

அதேபோல், திருவள்ளூர்- 61.96%, சென்னை- 55.31%, காஞ்சிபுரம்- 62.96%, வேலூர்- 67.30%, கிருஷ்ணகிரி- 65.98%, தர்மபுரி- 68.35%, திருவண்ணாமலை- 68.04%, விழுப்புரம்- 68.97%, சேலம்- 66.98%, ஈரோடு- 65.93%, நீலகிரி- 61.48%, கோயம்புத்தூர்-59.25%, திண்டுக்கல்- 67.32%, கரூர்- 69.21%, திருச்சி- 64.65%, பெரம்பலூர்- 68.36%, கடலூர்- 65.75%, நாகப்பட்டினம்- 61.37%, திருவாரூர்- 66.54%, தஞ்சாவூர்- 65.72%, புதுக்கோட்டை 68.48%, சிவகங்கை- 63.11%, மதுரை- 60.96%, தேனி- 64.95%, விருதுநகர்- 67.08%, ராமநாதபுரம்- 61.67%, தூத்துக்குடி- 62.77%, கன்னியாகுமரி- 62.27%, அரியலூர்- 67.13%, திருப்பூர்- 62.15%, கள்ளக்குறிச்சி- 69.60%, தென்காசி- 63.33%, செங்கல்பட்டு- 53.39%, திருப்பத்தூர்- 67.45%, ராணிப்பேட்டை- 67.82% வாக்குகள் பதிவாகியுள்ளது.

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு தேடி வந்த வாக்கு இயந்திரம்; வாக்களித்த 111 வயது மூதாட்டி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார். 

Next Story

"இலவசமாகப் பொருட்கள் வழங்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

modi interact with karnataka bjp election booth agents

 

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

 

இந்நிலையில் பிரதமர் மோடி, கர்நாடகாவில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பாஜகவை சேர்ந்த வாக்கு சாவடி முகவர்களுடன் காணொலி வாயிலாக உரையாடினார். அப்போது அவரை பேசுகையில், "கர்நாடக மாநில மக்கள் பாஜக மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர்களிடம் மக்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். நான் பாஜக தொண்டனாக கர்நாடகாவிற்கு வந்த போது மக்கள் என் மீது அன்பை செலுத்தினார்கள். கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன்.

 

இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாரத்துக்கு வரத் துடிக்கின்றன. அதற்காக எல்லா குறுக்குவழிகளையும் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நாட்டின் எதிர்காலம் குறித்து எவ்வித கவலையும் இல்லை. இலவசத்தையும் இலவசத் திட்டங்களையும் கூறி பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் தேர்தலுக்கு முன்பாகவே காலாவதி ஆகிவிடுகின்றன. இலவசமாகப் பொருட்கள் வழங்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். பொதுமக்கள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

 

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதையே அனைவரும் இலக்காகக் கொள்ள வேண்டும். உங்களது வாக்குச்சாவடியில் பாஜக வென்றால் அந்த தொகுதியிலும் நிச்சயம் வெற்றி பெறும். வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையே தேர்தலில் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தரும். பாஜக தொண்டர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

 

நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு மேற்கொண்ட விரைவான செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி அமைந்தால் நாடும் மாநிலமும் சேர்ந்து வளர்ச்சியடையும். மத்திய அரசிடம் சண்டையிட்டு திட்டங்களைச் செயல்படுத்தாத அரசு கர்நாடகத்தில் அமைந்தால் மாநிலம் எப்படி வளர்ச்சி அடையும். இரட்டை என்ஜின் அரசு அமைந்தாலே மக்களுக்கான எல்லா நலத்திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த முடியும்" என்று பேசினார்.