Skip to main content

முதல்வர் வருகை... கடைகளை அடைக்க வலியுறுத்தும் போலீஸ்!

Published on 20/12/2020 | Edited on 20/12/2020
Chief Minister's visit ... Police urge to close shops!

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் தொகுதியின் அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ராஜலட்சுமியின் இல்லப் பூப்புனித நன்னீராட்டு விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவரும் வருகை தர உள்ளனர். இதற்கான விழா ஏற்பாடுகள் சங்கரன்கோவிலில் உள்ள சேர்ந்தமரம் சாலையில் மெகா பந்தல் அமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதால் அந்தப் பகுதிகளின் கடைகளை காலை நேரம் அடைப்பதற்கு போலீஸ் வற்புறுத்தியது.

 

Chief Minister's visit ... Police urge to close shops!

 

அதன் காரணமாக டிச. 23 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை கச்சேரிரோடு, புளியங்குடி ரோடு, தெற்கு ரதவீதிப் பகுதிகளின் கடைகளை அடைப்பதற்கு நகர வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் நகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கமும், மேற்படி பகுதிகளின் கடைகளை அடைப்பதற்கு வேண்டுகோளடங்கிய நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இது குறித்து வர்த்தக சங்கத்தின் உறுப்பினர் ஒருவரிடம் கேட்டதில், முதல்வர் வருகையால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் கடைகளை அடைப்பதற்கு காவல்துறையினர் கேட்டுக் கொண்டதால் நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.