Skip to main content

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் திருவாரூரில் பரபரப்பு!!!

Published on 13/05/2019 | Edited on 14/05/2019

திருவாரூரை அடுத்த கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் வடக்கு வீதியில் உள்ள நீதி மோகன் என்பவரிடம் ரியல் எஸ்டேட் மனைகள் வாங்குவதற்காக பல்வேறு நபர்களிடம் பணம் திரட்டி அவரிடம் கொடுத்துள்ளார்.
 

thiruvarur


இவர் வாங்கிக் கொடுத்த பணம் மட்டுமே 3 கோடியே 67 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.  நீதி மோகன் இது போல் பல்வேறு நபர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டு நீதிமன்றத்தில் மஞ்சள் கடிதம் கொடுத்துவிட்டு சுதந்திரமாக திரிந்து வருகிறார். ஆனால் பணம் கட்டிய நபர்கள் ஏஜெண்டுகள் மூலமாக கட்டியதால் அனைவரும் ஏஜெண்டுகளை தொல்லை கொடுத்து வருகின்றனர்.

அந்த ஏஜெண்டுகளின் ஒருவரான பாண்டியன் என்பவர் பணம் கொடுத்தவர்களின் நெருக்கடி தாங்காமல் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள பிஎஸ்என்எல் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். நீதி மோகனை கைது செய்து எனது பணத்தை திருப்பி வாங்கி தரும் வரை கீழே இறங்க மாட்டேன் என்று கூறியபடியே இருந்தார். அவரது மனைவி மற்றும் நண்பர்கள் அனைவரும் கீழிருந்து கூப்பிட்டபோதும் அவர் இறங்க மறுத்து விட்டார். தீயணைப்புத்துறையினர் வாகனங்களை நிறுத்தினர், ஆம்புலன்ஸீம் தயார் நிலையில் வைத்திருந்தனர். இவரின் மிரட்டல் காரணமாக வடக்கு வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் மற்றும் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் கீழே இறங்கினர். பின்னர் 108 ஆம்புலன்சின் மூலம் பாண்டியனை முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பினர். இதனால் திருவாரூர் கடை வீதியே பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.