Skip to main content

டாஸ்மாக் கடை அமைக்காதே- பள்ளி மாணவிகள் தாசில்தாரிடம் மனு!

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

திருவண்ணாமலை மாவட்டம். செங்கம் அடுத்து குப்பத்தம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் குப்பநத்தம் அணைக்கட்டு உள்ளது. இங்கு பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான குடிமகன்கள் மது அருந்தி விட்டு செல்கின்றனர். அவர்கள் குடிப்பதற்கான மதுபானங்களை செங்கத்திலேயே வாங்கி செல்கின்றனர். இதனை அறிந்த டாஸ்மாக் நிர்வாகமும், அதன் ஊழியர்களும், அந்த சாலையில் ஒரு டாஸ்மாக் கடையை அமைப்பது என முடிவு செய்தனர்.

THIRUVANNAMALAI TASMAC SHOP SCHOOL STUDENTS PETITION FILE TO TAHSILDAR

இதற்காக செங்கத்திலிருந்து குப்பனத்தம் செல்லும் கிராம சாலையில் அரசு மதுபானக்கடை திறக்கப்படும் என கூறியதையடுத்து குப்பனத்தம் சாலையில் உள்ள ஒரு தனிநபர் இடத்தில் மதுபான கடை வைக்க பேசி முடித்து, அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். இந்த தகவலை அறிந்து, அந்த சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அதிர்ச்சியடைந்தது. 
 

THIRUVANNAMALAI TASMAC SHOP SCHOOL STUDENTS PETITION FILE TO TAHSILDAR

இந்த சாலையில் மதுபான கடை வந்தால் பள்ளி மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பள்ளி நிர்வாகம் செப்டம்பர் 3- ஆம் தேதி, 200- க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்து சென்று செங்கம் வட்டாட்சியரிடம் அரசு மதுபான கடையை அமைக்க வேண்டாம் என்று கூறி கோரிக்கை மனுவை அளித்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.