Skip to main content

நகை கொள்ளையன் முருகனுக்கு அடுத்தடுத்து ஜாமீன் கிடைக்கும் ரகசியம் !  

Published on 12/05/2020 | Edited on 12/05/2020
  murugan

 

திருச்சி லலிதா ஜீவல்லரியின் பின்பக்க சுவரை துளைபோட்டு கடந்த அக்டோபர் 2ம் தேதி ரூபாய் 13 கோடி மதிப்பிலான 29 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்த நகை கொள்ளை தொடர்பாக, திருவாரூர் மடப்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், கனகவள்ளி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை கோட்டை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முக்கிய குற்றவாளியான கனகவள்ளியின் மகன் சுரேஷ் அக்டோபர் 10ம் தேதி செங்கம் நீதிமன்றத்திலும், 11ம் தேதி கொள்ளையன் கும்பல் தலைவன் முருகன் பெங்களுரில் 11வது குற்றவியில் நடுவர் நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர். இதில் நவம்பர் 28ம் தேதி திருச்சி நீதிமன்றம் முருகனுக்கு 7 நாள் கஸ்டடி கொடுத்தது. இதில் பல திடுக்கிடும் தகவல்களை போலிசிடம் முருகன் வாக்குமூலமாக கொடுத்தார். அதில் சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பின்பக்கம் சுவரை துளைத்து கேஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து 19 இலட்சம் பணம், 470 கிராம் நகை ஆகியவை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

 

 


இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன் கூட்டாளி கணேசன், இவரது உறவினர் ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் பிறகு முருகன் பெங்களுர் போலிசாரிடம் ஓப்படைக்கப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் முருகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அதற்கு தேவையான மருத்துவம் முழுவதும் சிறையிலே வழங்கப்பட்டது. ஆனாலும் முருகனின் உடல்நிலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. கை, கால்கள் செயல் இழந்து போய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 


இந்த நிலையில் அவர்கள் முழுமையான சிகிச்சை பெறுவதற்கு கடந்த வாரம் லலிதா ஜீவல்லரி கொள்ளை வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில், வங்கி கொள்ளை வழக்கில் ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் முருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இன்னும் முருகன் மீது பாலக்கரை சிலிண்டர் திருட்டு வழக்கு மட்டும் பாக்கி உள்ளது. இதிலும் ஜாமீன் வாங்கிவிட்டால் வெளியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் முருகன் தரப்பு வழக்கறிஞர்கள். 

எப்படி அடுத்தடுத்த திருட்டு வழக்குகளில் முருகனுக்கு ஜாமீன் எப்படி கிடைக்கிறது என்று போலிஸ் தரப்பில் விசாரித்தபோது, முருகன் வழக்குகளில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதால் உயர்நீதிமன்ற உத்தரவின் படி முருகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என்கிறார்கள்.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.